Posts

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

போதைக்கு   மக்கள்   அடிமையாகி   அழியக்கூடாது   என்பதற்காக   போதை   ஒழிப்பு ,  நடவடிக்கைகளையும் ,  மக்கள்   மது   அருந்தக்   கூடாது   என்ற   பிரச்சாரத்தையும்   மேற்கொண்டார் .  திருட்டு ,  கொள்ளை ,  கொலை   போன்ற   சமூக   எதிர்ச்   செயல்களைச்   செய்யக்   கூடாது   என்று   வலியுறுத்திய   கணபதி ,  அவை   நிகழாமல்   தடுக்க ,  மக்களைப்   பாதுகாக்க   பாதுகாப்புப்   படைகளை   உருவாக்கினார் .  இந்திய   தேசிய   இராணுவத்தில்   இருந்தவர்களையும் ,  முற்போக்காளர்களையும் ,  பகுத்தறிவுச்   சிந்தனையாளர்களையும்   இப்பாதுகாப்புப்   படையில்   சேர்த்தார் . இப்படையின்   முக்கியப்   பணிகளாகக்   கீழ்க்கண்டவற்றை   வரையறுத்தார் . 1.   தொழிலாளர்களிடையே   ஒற்றுமை ,  வர்க்க   உணர்வு ,  தேசிய   உணர்வு ,  நாடு   தன்னாட்சி   பெற ...