கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

போதைக்கு மக்கள் அடிமையாகி அழியக்கூடாது என்பதற்காக போதை ஒழிப்புநடவடிக்கைகளையும்மக்கள் மது அருந்தக் கூடாது என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்திருட்டுகொள்ளைகொலை போன்ற சமூக எதிர்ச் செயல்களைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய கணபதிஅவை நிகழாமல் தடுக்கமக்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகளை உருவாக்கினார்இந்திய தேசிய இராணுவத்தில் இருந்தவர்களையும்முற்போக்காளர்களையும்பகுத்தறிவுச் சிந்தனையாளர்களையும் இப்பாதுகாப்புப் படையில் சேர்த்தார்.
இப்படையின் முக்கியப் பணிகளாகக் கீழ்க்கண்டவற்றை வரையறுத்தார்.
1.  தொழிலாளர்களிடையே ஒற்றுமைவர்க்க உணர்வுதேசிய உணர்வுநாடு தன்னாட்சி பெற பாடுபடுதல் போன்ற நற்பணிகள் செய்தல்.
2.  ஜாதி வேற்றுமைதீண்டாமை ஆகியவற்றை ஒழித்தல் மூடநம்பிக்கைகளை ஒழித்தல்.
3. கள்மதுசூதுலாட்டரி போன்ற பழக்கங்களை மக்களிடம் ஒழித்தல்.
4.  கொலைகொள்ளைதிருட்டுகடத்தல்போக்கிரி செயல்நாட்டுத் துரோகம் ஆகியவற்றைச் செய்கின்றவர்களைத் திருத்தி நல்வழியில் செலுத்துதல்திருந்த மறுக்கின்றவர்களைக் காவல்துறையில் ஒப்படைத்தார்.
5.  தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்துதொழிலாளர் நலன் காத்தல்தொழிற்சங்கத்திற்கு எதிராகச் செயல்படுகின்றவர்களையும் திருத்திஆதரவாகச் செயல்படச் செய்தல்.
மேற்கண்ட இந்த உயரிய நோக்கங்களை அடைய தொண்டர் படைக்குழு தலைவர் கணபதி அவர்கள் தலைமையில்தோழர்களுடைய முழுமையான ஒத்துழைப்புடன் சிறப்பாகவும்பொறுப்பாகவும்நலம் விளையும்படியும் செயல்பட்டது.
1946ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும்தொழிற்சங்க பொதுக்குழு கூட்டங்கள் எழுச்சியுடன் தொழிலாளர் நலனின் கண்ணுங் கருத்துமாகச் செயல்பட்டனதொழிற்சங்கத்தின் தீவிர செயல்பாடுகளில்போராட்டங்களில்உறுதிகுலையா ஒற்றுமையின்சீரிய தலைமையின் காரணமாகதொழிலாளர்கள் பல நன்மைகளைப் பெற்றனர்.
எட்டு மணி நேர ஓய்வுஎட்டு மணி நேர உறக்கம்எட்டு மணி நேர வேலை என வேலை நேரம் வரையறுத்தல்கூலிகள் என்று அழைக்காமல் தொழிலாளர்கள் என்று அழைத்தல்மே தினமான 1ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்தல் ஆகிய கோரிக்கைகளுடன் ஊதிய உயர்வு வேண்டியும் போராட்டங்கள் நடத்தியும் வெற்றி பெற்றனர்.
மே தின விழாக்கள்
சிங்கப்பூர்மலேசியா நாடுகளில் 1946, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் தலைநகரங்களிலும்தொழிற்சங்க தலைமை இடங்களிலும்ஒவ்வொரு தொழிற்சங்க கிளைகளிலும்தோட்டங்களிலும் (எஸ்டேட்தொழிலாளர்கள் வேற்றுமைகள் மறந்து ஒற்றுமையாய்க் கொண்டாடினர்.
மே தின கொண்டாட்டங்களில் தலைவர் கணபதிவீரசேனன் ஆகியோரும் மற்றும் சீனமலேய தலைவர்களும் நிர்வாகிகளும்பங்குகொண்டு உற்சாக உரையாற்றினர்தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து நீண்ட தூர அணிவகுப்பையும் நடத்தினர்அப்போது புரட்சிகரமான எழுச்சியூட்டும் முழக்கங்களையும் எழுப்பினர்.
இன்றைக்கு சிங்கப்பூர்மற்றும் மலேசியாவில் பணியாற்றும் தொழிலாளர்கள்மே தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவது அன்றைக்கு இவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகும்.
போட்டித் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்களின் திறமையான செயல்பாடுகளால் தொழிலாளர்களுக்கு உரிமைகள்வசதிகள் பல வழங்குவதால்தங்களுக்கு (முதலாளிகள் மற்றும் அரசுக்குசெலவு அதிகம் ஆனதில்தொழிற்சங்க நடவடிக்கைகளை பலவீனப்படுத்த போட்டித் தொழிற்சங்கங்களை உருவாக்கினர்என்றாலும் தலைவர் கணபதி போன்றவர்களின் திறமை வாய்ந்த செயல்பாடுகளால்போட்டியாளர்களால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.
சிங்கப்பூர் வேலை நிறுத்தமும் கணபதி உரையும்
சிங்கப்பூரில் தியாகி வீரசேனன் தலைமயிலான சிங்கப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம்ஆர்பர் தொழிலாளர் சங்கம்போக்குவரத்து தொழிலாளர் சங்கம்லெமனேட் தொழிற்சங்கம் மற்றும் சில தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துகோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்ஆனால் கோரிக்கைகளை ஏற்காதுபேச்சு வார்த்தையை முறியடிக்கவே முதலாளிகளும் அரசும் முயற்சி செய்ததால்வெறுப்படைந்த தொழிற்சங்கங்கள் மாபெரும் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. 16 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்றதுவரலாற்றில் குறிப்பிடத்தக்க வேலை நிறுத்தமாகவும் அது அமைந்தது.
கார்கள்பேருந்துகள் ஓடவில்லைசாலைத் துப்புரவு நடைபெறவில்லைகழிவறைகள் தூய்மை செய்யப்படவில்லைசிங்கப்பூரே நாற்றம் அடிக்கும் நிலையடைந்ததுசாக்கடை நீர் அடைப்பு நீக்கப்படாமல் சாலைகளில் ஓடியதுபொதுமக்கள் தவித்தனர்அரசு அதிர்ச்சியடைந்தது.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரசேனன் அவர்கள் தலைமையில்ராபின்சன் பூங்காவில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் எழுச்சிமிகு பேரணியை நடத்தினர்தீவிரமான முழக்கங்களை முழங்கினர்.
ஊர்வலத்தின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றதுவீரசேனன்கணபதிசம்சுதீன் போன்றவர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசினர்.
தியாகி கணபதியின் உணர்வுப்பூர்வமான உரைஎல்லோர் உள்ளத்திலும் எழுச்சியை ஏற்படுத்தியதுஅரசுக்கும் முதலாளிகளுக்கும் கடுமையான நெருக்கடியைத் தந்தது.
கணபதி உட்பட தலைவர்களைகாவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர்இதனால் ஏற்பட்ட கலவரத்தில் தடியடியும் பின்னர் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றதுஇரண்டு சீனத் தொழிலாளர்கள் இறந்து போயினர்கூட்டம் சிதறி ஓடியதுதலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பொது வேலைநிறுத்தத்தின் விளைவாய் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டன.
கணபதி கலந்துகொண்ட ஆசிய உறவு மாநாடு
இந்தியாவில்டெல்லியில் நேருவின் தலைமையில் ஆசிய உறவு மாநாடு 1946-இல் நடத்தப்பட்டதுஅந்த மாநாட்டில் தியாகி கணபதி அவர்களும் கலந்து கொண்டார்இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடுஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள்அறிஞர்கள்குடியரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கணபதிமலேசியா திரும்பியதும்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுதொழிலாளர் மாநாடுகள்கருத்தரங்குகள் போன்றவற்றில் கலந்து கொண்டார்அதன் மூலம்மலேசியா முழுவதும் தொழிற்சங்க செயல்பாடுகள்முறையாகவும்பயனுள்ள முறையிலும் அமைந்துதொழிலாளர்கள் பல்வேறு உரிமைகளும் சலுகைகளும் பெற்றனர்.
அவசர காலச் சட்டம்
மலேயா நாட்டுச் சுதேசி இயக்கம் அம்னோதன்னாட்சி விடுதலைக்குப் போராடியதுஒத்துழையாமை இயக்கம் நடத்திஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேற வலியுறுத்தினர்.
எனவேஆங்கில ஆட்சியாளர்கள் கிளர்ச்சியாளர்களை கடுமையாக ஒடுக்க முடிவு செய்து அதற்கான சட்டம் பிறப்பிக்க முடிவு செய்தனர்.
இங்கிலாந்தின் ஆலோசனைப்படிகிழக்காசிய கவர்னர் ஜெனரல் மால்கம் மெகனால்டும்மலேசிய கவர்னர் ஜெனரல் லார்ட் லூயி மவுண்ட்பேட்டனும்மலேசிய ஹைகமிஷனர் ஹென்றி கர்னினியும்போலீஸ் அதிகாரிகளின் கருத்துக்களைப் பெற்று, 20.06.1948இல் இரவு 10 மணிக்கு அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.
அதன்படிதுப்பாக்கிதுப்பாக்கித் தோட்டாக்கள்ரிவால்வர்ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கும்அதன் மூலம் கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுஅன்று இரவுதீவிரவாதிகள் போராளிகள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்தொழிற்சங்கத் தலைவர்களும்உறுப்பினர்களும் ஏராளமாகக் கைது செய்யப்பட்டனர்கைது செய்யப்பட்டவர்களில் 20 விழுக்காடு தமிழர்கள் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.
கைது செய்யப்பட்டவர்கள்அடித்து உதைத்து சித்திரவதைச் செய்யப்பட்டனர்பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்நூற்றுக்கணக்கானோர் தூக்கிலிடப்பட்டனர்.
இக்கொடுமைகளின் விளைவாய் கம்யூனிஸ்ட்டுகளும்தொழிற்சங்கத் தலைவர்களும் தலைமறைவாகக் காடுகளுக்குச் சென்றனர்தாங்கள் பழிவாங்க நினைக்கும் தலைவர்களைக் கைது செய்து மரணதண்டனை வழங்க சிறு தடயம் கிடைத்தாலும் போதும் என்று துருவித் துருவி அலசித் தேடினர்.
காடுகளுக்குச் சென்றவர்கள்அங்கு இந்திய தேசிய இராணுவத்தினரால் விடப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திகொரில்லா முறையில் போர்புரிந்துஆங்கில ஆட்சியை மலேசியாவிலிருந்து அகற்ற முனைந்தனர்.
தலைவர் கணபதி கைது
அவசர காலச் சட்டத்தின்படி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும்பிரிட்டிஷாரை எதிர்க்கவும்மலேசிய தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் கணபதி அவர்கள் தன் தோழர்களுடன் தலைமறைவாகிகோலாலம்பூருக்கு அருகில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த டமன் சாரா எஸ்டேம் அருகிலுள்ள காட்டில் இருந்தபோது, 1948 ஆகஸ்டு மாதம் சிறப்புக் காவல் இராணுவப் படையால் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் போலீஸ் காவலில் 10 தினங்கள் வைக்கப்பட்டு விசாரணை செய்தபின் கோலாலம்பூர் மத்திய புடு சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைவர் கணபதி கைது செய்யப்பட்ட செய்திசிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பியதுமறுநாள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஆங்கிலதமிழ்மலேயாசீன நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டதுஇந்திய நாளேடுகளிலும் செய்தி வெளியிடப்பட்டது.
இதையறிந்த மலேசியாசிங்கப்பூர்இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்த மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தனர்கண்ணீர்ச் சிந்தினர்.
கணபதிக்கு வந்த சம்மன்
சிறையிலடைக்கப்பட்ட கணபதிமீதுசிலாங்கூர் மாநில சமஸ்தான நிர்வாக நீதின்றம்கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தலைவர் கணபதிக்கு சம்மன் அனுப்பியது.
குற்றச்சாட்டுகள்
1.  நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று நம்புகிறோம்.
2.  அந்த இயக்கத்திற்கு உதவுபவர் என்று நம்புகிறோம்.
3.  கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப்போர் செய்வீர் என்று நம்புகிறோம்.
4.  தங்களைக் கைது செய்தபோதுநீங்கள் ஆறு குண்டுகள் நிரப்பப்பட்ட ரிவால்வர் வைத்திருந்ததால்அவசர காலச் சட்டப்படி தாங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
இக்காரணங்களுக்காக நீங்கள் நீதிமன்றக் காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளீர்கள்இவைகளுக்கு வரும் 15.3.1949 அன்று நடைபெற இருக்கும் நீதி விசாரணையின் போதுதக்க பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அச்சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்மன் சிறையிலிருந்த கணபதிக்கு வழங்கப்பட்ட செய்திபத்திரிகைகளில் வெளியிடப்பட்டதுஇதைக் கண்ட தமிழர்கள்மற்றும் தொழிற்சங்கவாதிகள்தலைவர் கணபதியை தூக்கிலேற்றவே ஆங்கில அரசு திட்டமிட்டுள்ளதுஎனவேஅவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்தமிழகத் தலைவர்களும் பெரிதும் கவலை அடைந்தனர்.
தலைவர் கணபதிக்குத் தரப்பட்டது மரண தண்டனை
சம்மனில் கண்டவாறு கணபதி அவர்கள் 15.3.1949 அன்று காலை 8.45 மணிக்கு நீதிமன்றத்திற்குத் தக்கப் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதுகோலாலம்பூரில் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருந்த தனி நீதிமன்றக் கூடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஒரு மணி 40 நிமிட நேரம் கணபதியின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதுவிசாரணைக்குப்பின் நீதிபதிகள்தனியறையில் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர்பின் தலைமை நீதிபதிகணபதி அவர்களைப் பார்த்துநீங்கள் ஆறு புல்லட் நிரம்பிய ரிவால்வர் வைத்திருந்தது அவசர காலச் சட்டப்படி மரண தண்டனைக்கு உரிய குற்றமாகும்எனவேஉங்களுக்குச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பிற்குப் பின் கணபதி அவர்கள் கோலாலம்பூர் புடு சிறைச்சாலைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
இச்செய்தியைச் சிங்கப்பூர் ரேடியோ மாலை 7.00 மணிக்கு ஒலிபரப்பியதுஉலகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கவாதிகளும்இடதுசாரிகளும்தமிழ் மக்களும்இந்தியத் தலைவர்களும்கிழக்காசிய மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்அளவுக்கு மீறிய துயரங்கொண்டனர்.
தந்தை பெரியார்
தந்தை பெரியார்குத்தூசி குருசாமிபேரறிஞர் அண்ணா.ஜீவானந்தம்பி.இராமமூர்த்திகல்யாணசுந்தரம்.எஸ்.கே.அய்யங்கார்சிந்தன்தமிழ்ஒளிமுருகேசன்கே.டி.ராஜுஎம்.என்.நம்பியார் மற்றும் எண்ணற்ற தலைவர்கள்தூக்குத் தண்டனையை ரத்து செய்து கணபதியை விடுதலை செய்யக் கோரிதீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும்மாநில அரசுக்கும் அனுப்பினர்.
அகில இந்தியத் தலைவர்கள் கணபதி அவர்களை விடுதலை செய்யக்கோரிஇந்தியா முழுமையிலிருந்தும்அனைத்துக் கட்சிகள்தொழிற்சங்கங்கள்விவசாயச் சங்கங்கள்பொதுவுடைமை இயக்கங்கள்ஒன்றுசேர்ந்து ஊர்வலம் நடத்தின.
அகில இந்திய தலைவர் எஸ்..டாங்கே.கே.கோபாலன்இரேன் முகர்ஜிபி.ஜி.ஜோஷிபி.டி.ரணதிவேநம்பூரிபாட் போன்றோர்கணபதியை விடுதலை செய்யக் கோரி பொதுக் கூட்டங்கள் நடத்திதீர்மானம் நிறைவேற்றிஇந்தியப் பிரதமர் நேரு அவர்களுக்கும்பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அவர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
பிரதமர் நேரு
இந்தியப் பிரதமர் நேரு அவர்கள்மலேசியாவுக்கான இந்திய தூதர் ஜான்திவி அவர்களுக்குக் கடிதம் எழுதிமலேசியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதத்தை நேரில் தந்துகணபதி அவர்களைக் கருணை அடிப்படையில் விடுவிக்கக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்தார்இம்முயற்சியைப் பற்றிஇந்திய தூதர் ஜான்திவி அவர்கள்புடு சிறையிலிருந்த கணபதியைச் சந்தித்துக் கூறிவிடுதலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
அய்.நாமன்றத்தில் வேண்டுகோள்
கணபதி அவர்களை விடுதலை செய்யக் கோரிஅய்.நா.மன்றத்தில்இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன் வேண்டுகோள் வைத்தார்அய்.நாமன்றம் இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகப் பத்திரிகைகள் கண்டனம்
தலைவர் கணபதிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையைக் கண்டித்துவிடுதலைஜனசக்திசுதேசமித்திரன்தினமணிஇந்தியன் எக்ஸ்பிரஸ்இந்து போன்ற நாளேடுகளும்திராவிட நாடுதம்பிபோர்வாள்ஆனந்தவிகடன்கல்கிதிராவிடன்தமிழ்மணிசக்தி போன்ற ஏடுகளும் செய்திகள் வெளியிட்டுமரண தண்டனையை நீக்கக் கோரினதமிழகம் முழுக்க கணபதியை விடுவிக்கக் கோரி உச்சக்கட்ட கிளர்ச்சிகள் நடந்தன.
கணபதியின் கடிதம்
கோலாலம்பூர் புடு சிறையில் இருந்தபடிசிங்கப்பூர் சிறையில் இருந்த தன் சகோதரர் சற்குணத்திற்கும்தம்பிக் கோட்டை பிமாரியப்பனுக்கும் தனது நிலையை விளக்கியும்தன்னோடு மக்கள் நலனுக்குப் பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார்.
தலைவர் கணபதியின் மேல்முறையீடு
கணபதி அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, 04.4.1949இல் மேல்முறையீடு செய்தார்.
சிலாங்கூர் மாநில சமஸ்தான விசாரணைக் கமிஷனால்தலைவர் கணபதியின் மேல்முறையீட்டு மனுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுஅத்துடன் அவரை விடுதலை செய்யக்கோரி வந்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனபரிசீலனை மற்றும் விசாரணையின் முடிவில்கணபதியின் மரண தண்டனை 23.4.1949 அன்று மீண்டும்  உறுதி செய்து தீர்ப்பளிக்கப் பட்டது.
ஆனால் 23.4.1949 அன்று சிங்கப்பூர் வானொலி பகல் 12 மணி செய்தியில் மறுநாள் (24.04.1949) கணபதி கோலாலம்பூர் புடு சிறையில்காலை 5 மணிக்குத் தூக்கிலிடப்படுவார் என்று அறிவித்ததுகேட்ட அனைவரும் அதிர்ச்சியால் நிலைகுலைந்தனர்.
மீண்டும் கிளர்ச்சிகள்பேரணிகள்ஆர்ப்பாட்டங்கள்தமிழகத் தலைவர்கள் அண்ணா உட்பட அனைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து கணபதியைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர்அய்.நாமன்றத்திலும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இவற்றின் விளைவாய் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, 23.04.1949 அன்று மாலை 7 மணிக்குசிங்கப்பூர் வானொலி அறிவித்ததுஇச்செய்தியைக் கேட்டு மலேசியாசிங்கப்பூர்இந்தியா போன்ற நாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 30.4.1949 அன்று பிற்பகல் 3 மணிக்கு சிறை கண்காணிப்பாளர் தலைவர் கணபதியைச் சந்தித்துதங்களை 4.5.1949 அன்று காலை 5 மணிக்குத் தூக்கிலிடும்படி உத்தரவு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
கணபதி அதிர்ச்சியின்றி அமைதியாகக் காணப்பட்டார்மெல்ல புன்னகைத்தார்வீரனும் தியாகியும் என்றைக்கும் மரணத்தை மகிழ்வுடன்தானே எதிர்நோக்குவர்உண்மையான தியாகி கணபதியும் அவ்வாறே இருந்தார்.
கண்காணிப்பாளர்தங்களுக்கு விருப்பமான உணவைக் கூறுங்கள் என்றார்யாருக்காவது செய்தி சொல்ல வேண்டியிருப்பினும் சொல்லுங்கள் என்றார்.
கணபதி எழுதுவதற்குத் தாளும்பென்சிலும் கேட்டார்அதன்படி தாளும்பென்சிலும்கடித உறையும் வழங்கப்பட்டன.
இதையறியாத தமிழகத் தலைவர்களோகணபதிக்கு இனி மரண தண்டனை இருக்காது என்று மகிழ்வோடு இருந்தனர்ஆனால்அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் 3.5.1949 அன்று சிங்கப்பூர் வானொலிபகல் 12 மணி செய்தியில்மறுநாள் காலை (4.5.1949) 5 மணிக்குக் கோலாலம்பூர் புடு சிறையில் தூக்கிலிடப்படுவார் என்று அறிவித்தது.
மக்களும் தலைவர்களும் கடுமையான ஆத்திரம் கொண்டனர்மீண்டும் ஆர்ப்பாட்டங்களும்கண்டனங்களும்கோரிக்கைகளும் தொடர்ந்தனஇம்முறையும் மரண தண்டனை நிறுத்தப்படும் செய்தி இரவு 7 மணி செய்தியில் அறிவிக்கப்படும் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர். 7 மணி செய்தி படிக்கப்பட்டபோதுகணபதியைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லைஎனவேகணபதியை இனி நம்மால் காப்பாற்ற முடியாதுமாபெரும் தியாகியை இழக்கப் போகிறோம் என்று எல்லோரும் செய்வதறியாது திகைத்தனர்.
4.5.1949 விடியற்காலை 3.15 மணிக்குத் தியாகி கணபதி சிறையிலிருக்கும் தோழர்களிடம் பேசினார்தமிழிலும்சீன மொழியிலும் பேசினார்தன்னுடன் இன்னல் ஏற்ற எல்லோரையும் நினைவுகூர்ந்தார்.
மலேயா நாட்டு மக்களின் தன்னாட்சி விடுதலைக்கும்பாட்டாளி மக்களின் பொருளாதாரச் சமத்துவத்திற்கும்ஆங்கில ஆட்சியாளர்களின் ஆதிக்ககொடுங்கோன்மை ஆட்சியை அகற்ற வேண்டியும் தமிழிலும்சீன மொழியிலும் ஆவேசத்துடன் உணர்வு பொங்கப் பேசினார்உரத்த குரலில் தொழிலாளர்களின் கீதத்தைப் பாடினார்சாவின் விளிம்பில் நின்று கொண்டிருந்த வேளையிலும் அவரது விடுதலை வேட்கையும்தொழிற்சங்க உணர்வும் குன்றாது நின்றன என்பதை இது எடுத்துக்காட்டியது.
காலை 3.30 மணியளவில் சிறைக் கண்காணிப்பாளர்சிறை சார்ஜண்ட்சிறைக்காப்பாளர் உட்பட 15 பேர் உள்ளே நுழைந்தனர்சிறிது நேரத்தில் நீதிபதியுடன் ஜெயிலரும்டாக்டரும் வந்தனர்தூக்குமேடை முதல் நாளே சீர் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
கணபதி அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கதவு திறக்கப்பட்டதுஜெயிலர் கணபதியைப் பார்த்துமிஸ்டர் கணபதி என்றார்எல்லோரும் கணபதியின் முகத்தைக் கவலையுடன் பார்த்தனர்கணபதிக்கு இரவு வழங்கப்பட்ட உணவும் தண்ணீரும் அப்படியே உண்ணப்படாமல் இருந்தன.
மருத்துவர் கணபதியின் உடலை முழுமையாகச் சோதித்தார்உடல்நலமாக இருந்ததுமணி 4 ஆயிற்றுசிறைக் கைதிகள் அனைவரும்கணபதி புகழ் ஓங்குகஎன்று உணர்ச்சியுடன் முழங்கினர்அந்த முழக்கம் சிறைச்சாலை எங்கும் எதிரொலித்தது.
கணபதியைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றனர்குளித்து முடித்தபின் சிறைச்சாலைக்கு உரிய உடை வழங்கப்பட்டதுகணபதி அந்த உடைகளை அணிந்து கொண்டார்மருத்துவர் மீண்டும் அவர் உடலைச் சோதித்தார்உடல் நலம் நன்றாக இருப்பதாக ஜெயிலரிடம் சொன்னார்.
ஜெயில் கண்காணிப்பாளர் கணபதியைப் பார்த்துநீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களாவேறு யாருக்காவது செய்தி சொல்ல வேண்டுமாஎன்று கேட்டார்.
தலைவர் கணபதி மெல்ல புன்னகைத்தபடிமலேயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும்மலேயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும்மலேயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும்மலேயாவில் மட்டுமல்லஉலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைக் கொடுமைக்கு முடிவு விரைந்து கிடைக்கட்டும்இதுவே என் இறுதியான உறுதியான விருப்பம்வாழ்க வையகம்என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.
தலைவர் கணபதி அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்வார்டன் ஒருவர் கவலை தோய்ந்த முகத்துடன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
மலேயா மண் வளங்கொழிக்கட்டும்என்று வாழ்த்தியபடி தண்ணீரைக் குடித்தார்எல்லோரும் கவலையுடன் அவரையே பார்த்தனர்.
நீதிபதி உட்பட அனைவரும் பின்தொடரகணபதி கம்பீரமாக தூக்குமேடையை நோக்கி நடந்தார்.
புடு சிறைச்சாலை 700 மீட்டர் நீளமும், 500 மீட்டர் அகலமும் கொண்டதுஇச்சிறை இருந்த இடத்தின் பெயர் புடு என்பதால் அப்பெயராலே இச்சிறை அழைக்கப்பட்டதுஇச்சிறைச்சாலையில் தூக்குமேடை 15 அடி சம சதுரம் கொண்டதுஅதன் வாயிலில்இரும்புக் கதவிற்கு மேல் சுவரில்ழுயடடடிறள என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
தூக்குமேடைக்கு நடுவில் 8 அடி நீளம் 4 அடி அகலம் 10 அடி ஆழம்கொண்ட குழி இருக்கும்இதன்மீது பலகைப் பொருத்தப்பட்டிருக்கும்இந்த பலகை கைப்பிடியுள்ள ஒரு கருவியுடன் பொருத்தப்பட்டிருக்கும்அந்தக் கைப்பிடியை இழுத்தால் பலகை விலகி கயிற்றில் மாட்டப்பட்ட ஆள் குழியுள் தொங்குமாறு அது அமைக்கப்பட்டிருந்ததுஅந்தக் கைப்பிடியை இயக்கி தூக்குத்தண்டனையை நிறைவேற்ற ஒருவர் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.
தலைவர் கணபதி தூக்குமேடையில் ஏறினார்பள்ளத்திற்கு மேல் உள்ள பலகையில் வெள்ளைநிற வட்டம் போடப்பட்டிருந்ததுஅதில் கணபதி நிற்க வைக்கப்பட்டுஅவர் கால்கள் இரண்டும் கட்டப்பட்டனஅவரது முகத்தைக் கருப்புத் துணியால் கழுத்து வரை மாட்டிக் கட்டினார்கள்.
தலைக்கு மேல் தொங்கிய தூக்குக் கயிற்று வளையத்தை கழுத்திலே மாட்டி சுருக்கை நெருக்கினார்கள்பின் ஜெயிலரின் ஆணைக்கு எல்லோரும் காத்திருந்தனர்ஜெயிலர் சரியாக 5 மணிக்குத் தூக்கில் போட ஆணையிட்டார்.
உடனேகைப்பிடியை இழுக்கும் பணியாளர் கைப்பிடியை இழுத்தார்உடனே தியாகி கணபதி நின்றிருந்த இரும்புப் பலகை இரண்டும் விலகிக் கொள்ளஅவர் பள்ளத்தில் தொங்க கழுத்தில் மாட்டப்பட்டக் கயிறு இறுக்கியதுஆம்தொழிற்சங்கத் தலைவரும்போராளியும்தமிழ் மக்களின் பாதுகாவலரும்பகுத்தறிவு பொதுவுடமைச் சிந்தனையாளருமான மக்கள் தொண்டர் மாபெரும் தியாகி கணபதி அவர்கள் தூக்கிலிடப்பட்டார்.
பத்து நிமிடங்கள் அவர் தூக்கிலே தொங்கவிடப்பட்டார்உடல் துடிப்பு ஓய்ந்ததுஒப்பற்ற தீரர் மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதர் உயிரிழந்தார்!
நீதிபதி உள்ளிட்ட அனைவர் முன்னிலையில் 5.20 மணிக்குத் கதவு திறக்கப்பட்டதுகாலெமல்லாம் மக்களுக்காகவே இன்னல் ஏற்ற தலைவர் கணபதி கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உலகில்இருபதாம் நூற்றாண்டில் அயல்நாட்டில் அரசியல் காரணத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட முதல் தமிழர் தியாகி கணபதி அவர்கள்தான் என்பதுகூட முதன்மையான வரலாற்றுப் பதிவாகும்ஆங்கில ஆட்சியாளர்கள் பலமுறை போக்குக் காட்டி இறுதியில் அவரைத் தூக்கிலிட்டதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு ஆங்கிலேயர்களைப் பாதித்திருக்கிறார் என்பதும்தன் இனத்திற்காகப் பாடுபட்டிருக்கிறார் என்பதும் விளங்குகிறது.
மருத்துவர் தூக்கில் தொங்கிய தியாகி கணபதியின் உடலைச் சோதித்து அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தார்உடனே அவரது உடல் கீழே இறக்கப்பட்டதுஅவரது கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்குகாலில் கட்டப்பட்ட கட்டும் விடுவிக்கப்பட்டனஅதன்பின் கழுத்திலிருந்த கயிறும் விடுவிக்கப்பட்டதுஉடல் (ஸ்ட்ரெச்சரில்சுமப்பானில் கிடத்தப்பெற்றுமுகத்தை மறைத்துமூடப்பட்டிருந்த கருப்புத் துணியும் அப்புறப்படுத்தப்பட்டது.
அவரது கண்கள் திறந்தபடியே இருந்தனவாயும் திறந்தே இருந்ததுநீதிபதி அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்ஜெயிலர் உத்தரவுப்படி உடல் பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டதுஅங்குள்ள சிமெண்ட் பலகையின்மீது உடல் கிடத்தப்பட்டதுஅவரது உடலில் இருந்த வெள்ளை மேலாடையும்கால்சட்டையும் கழற்றப்பட்டனபின் உடல் குப்புற கிடத்தப்பட்டது.
ஜெயிலர் உத்தரவுப்படி மருத்துவர் கத்திரிக்கோலால்கணபதி அவர்களின் குதிகால்களின் நரம்புகளை வெட்டினார்அப்போது அவர் காலிலிருந்த உறைந்த இரத்தம் சிமெண்ட் பெஞ்சில் சிதறியதுபின் அவரின் நிர்வாண உடல்மீதுஅவர் அணிந்திருந்த மேலாடையையும் கால்சட்டையையும் போர்த்தப்பட்ட பின்உடல் பெட்டிக்குள் வைத்து ஆணி அடிக்கப்பட்டதுபின் உடல் வேனில் ஏற்றப்பட்டது.
சிமெண்ட் பெஞ்சில் சிதறிய இரத்தம் தண்ணீரால் கழுவப்பட்டதுஅதன் வழி அவரது இரத்தம் மலேசிய மண்ணில் கலந்ததுதியாகி கணபதியின் நினைவு மக்கள் மனதில் கலந்தது.
மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
கரைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்
நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்த போமோ?
பாரதிதாசன்
ஆம்தொழிலாளர்களின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மாமனிதர் கணபதியினால் தூண்டப்பட்ட உணர்வைஅவரை அழித்ததன் மூலம் அழிக்க முடியவில்லைஅழிந்தது ஆங்கில ஆதிக்கந்தான்.
அவர் பட்ட இன்னல்கள்தான் இன்றைக்குத் தொழிலாளர் பெற்ற உரிமைகள்அவர் பெற்ற இறப்புதான் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வாழ்வு!

வாழ்க தியாகி கணபதியின் புகழ்!

நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)

வைகுண்ட சுவாமிகள் (கி.பி.1809-1851)